வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது
அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.
ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.
இதில் காலை மதியம் இரவு வரை புதுப்புது சீரியல்களை போட்டு மக்கள் மனதில் எளிதாக இடம்பிடித்து விடுகின்றன. அதில் கயல், எதிர் நீச்சல், அருவி, இனியா, இலக்கியா, கண்ணான கண்ணே, சுந்தரி, அன்பே வா, தாலாட்டு என லிஸ்ட் பெரியது.
இதில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு. அப்படி அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் தொடர்தான் கண்ணான கண்ணே. இந்த சீரியல் பாடலுக்கு என்று ஒரு கூட்டமே உள்ளது.
அந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக நாடகக்குழு வே அறிவித்துள்ளது. இதானல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதே போல மதியம் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் தொடரும் கிளைமாக்ஸ் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது
இதனால்தான் மலர் என்ற புதிய நாடகமும் ஒளிபரப்பாக உள்ளது என தற்போது ப்ரோமோவும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, கண்ணான கண்ணே முடிவுக்கு வருகிறது என ஒரு வாரத்திற்கு முன்பே தகவல் வெளியான நிலையில், தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. கடைசியாக மொத்த படக்குழுவினரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இணையத்தில் வைரல் ஆகி வரும் புகைப்படங்கள் இதோ..
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.