தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான சுந்தர் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இன்றும் தொடர்ந்த கமர்ஷியல் படங்களை தந்து கொண்டிருக்கும் அவர் ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் “முறை மாமன்” என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.
உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக இயக்குனர் சுந்தர் சி யின் அரண்மனை 4 எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, இதன் பின்னர் இவர் இயக்கப் போகும் படம் எது என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் அவரே தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் வடிவேலு நடிப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. வடிவேலு இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை சுந்தர் சி கொடுத்த நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சுந்தர்சி படத்தில் வடிவேலு நடிக்காமல் இருந்து வந்தார்.
மீண்டும் இவரின் படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலில் கவுண்டமணியுடன் பணிபுரிந்து வந்தார். பின் வடிவேல் உடன் இணைந்தார். இவர்களுடைய கூட்டணி மாபெரும் அளவில் ஹிட்டானது. ஆனால், திடீரென்று இவர்கள் மோதல் காரணமாக பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர், விவேக் மற்றும் சந்தானத்துடன் பணியாற்றி வந்ததால் சந்தானத்தை தனக்கு தெரியாமல் படத்தில் நடிக்க வைத்ததால் சுந்தர் சியிடமிருந்து வடிவேலு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது இந்த சண்டையை தள்ளி வைத்துவிட்டு சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.