சினிமா / TV

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் கர்நாடகாவில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என கர்நாடகா பிலிம் சேம்பர் கூறியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆதலால் “தக் லைஃப்” திரைப்படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியது. எனினும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆதலால் அத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “திரைப்படம் வெளியாகும்போது வன்முறை ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும். திரைப்படம் வெளியாகும் திரையரங்கத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறியுள்ளது.

மேலும், “கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்திற்கு யாராவது தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட வேண்டும்” எனவும் கூறியுள்ளது. இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படம் வெளியாகும் திரையரங்களில் பாதுகாப்பு அளிப்போம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது கர்நாடக அரசு. எனினும் இத்திரைப்படம் தமிழ்நாட்டிலேயே தோல்வியடைந்ததால் இதனை வெளியிட மாட்டோம் என கர்நாடக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனராம்.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.