சினிமா / TV

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. வெளியான 5 நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது இத்திரைப்படம். 

இதே கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட  பலரும் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளும் வசனங்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி அமைக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் மோகன்லால் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என கூறப்படும் 17 இடங்களில் கட் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

24 இடங்களில் கட்…

இந்த நிலையில் “எம்புரான்” திரைப்படத்தில் 24 இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளனவாம். அதுமட்டுமல்லாது தேசிய புலனாய்வு அமைப்பை பற்றி இத்திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியையும் நீக்கியுள்ளனர். 

குறிப்பாக  வில்லனின் பெயரான பஜ்ரங்கியை பல்தேவ் என்று மாற்றியுள்ளனர். முக்கியமாக இத்திரைப்படத்தில் நன்றி அட்டையில் (Thanks Card) இடம்பெற்ற ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல கூடுதல் மாற்றங்களோடு இத்திரைப்படம் மறு சென்சார் செய்யப்பட்டுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.