நடிகர் சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் இவர்களுடன் ஷிவதா, சுவாஸிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படம் கருப்பசாமி கதையை மையமாக வைத்து உருவாகி வருவதாக தெரிய வருகிறது. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு “வேட்டை கருப்பு” என்று பெயர் வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்று வருகிறதாம். இந்த நிலையில் ஒரு நாள் நடிகர்கள் அணியக்கூடிய உடைகள் சரியாக அமையவில்லையாம். இதன் காரணமாக ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பை ரத்து செய்து வைத்திருந்தார்களாம்.
உடைகளை தயார் செய்ய ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் ஆடை வடிவமைப்பாளர்கள் தையல் கலைஞர்கள் கொண்ட ஒரு குழு எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். அப்படி இருந்தும் ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட அமைப்பினரை கடுப்பாக்கிய பேச்சு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
முன்னணி வில்லன் நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தொடக்கத்தில் உதவி இயக்குனராக…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க.…
அறிக்கை போர் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு சமீப நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இருவரும் ஒருவருக்கொருவர் மாறி…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு…
அரசியல்வாதி விஜய் விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும்…
This website uses cookies.