சினிமா / TV

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா?

கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத்திரைப்படத்திற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தாலும் இப்போது வரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.

இடையில் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் பிசியாகிவிட்டனர். இத்திரைப்படங்களுக்குப் பிறகாவது “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு, சூர்யா, வெற்றிமாறன் ஆகியோரை தான் சந்தித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

சூர்யா எடுத்த திடீர் முடிவு

“ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நீடிக்குமாம். அந்த வகையில் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாது, சூர்யா வெற்றிமாறனிடம் “வாடிவாசல்” திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் கேட்டுள்ளாராம். ஏனென்றால் வெற்றிமாறன் வருடக்கணக்கில் படப்பிடிப்பை இழுத்தடித்து விடுவார் என்று சூர்யா பயப்படுகிறாராம். ஆதலால் முழு ஸ்கிரிப்ட்டையும் சூர்யா கேட்டுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவலும் வெளிவருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.