அப்போ.. ஜோடி ஜோடியா போட்டோ போட்டதெல்லாம் பொய்யா?.. சூர்யா – ஜோ விவாகரத்து உண்மையை பகிர்ந்த பிரபலம்..!

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.

இந்நிலையில், சூர்யா ஜோதிகாவை விவாகரத்து செய்யப்போவது திடீரென ஷாக்கிங் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. படங்களில் நடிப்பது தொடர்பாக சூர்யா ஜோதிகாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், இதனால் விவாகரத்து முடிவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தான் தனது பிள்ளைகளுடன் மும்பை புறப்பட்டு சென்று விட்டார் ஜோதிகா என தகவல்கள் சொல்லப்படுகிறது.

இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில், சூர்யா ஜோதிகா விவாகரத்து பற்றி பேசியுள்ளார். விவாகரத்து அதெல்லாம் வாய்ப்பே கிடையாது. அதனால்தான் ஜோதிகா மும்பைக்கு போயிட்டாங்க, சண்டைன்னு பேசுறதெல்லாம் உண்மை கிடையாது பொய் என்றும், மும்பை போனதே ஜோதிகாவின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை கடைசி காலத்தில் பெற்றோருடன் இருக்க வேண்டும் என்ற ஆசை பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற கடமையும் இருந்தது. அதனால்தான் ஜோதிகா சூர்யா மும்பைக்கு சென்று விட்டார்கள். எதையாவது ஊதிவிட வேண்டும் என்று இதையெல்லாம் செய்கிறார்கள் என்று சூர்யா ஜோதிகா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முன்னதாக பேட்டி ஒன்றில், அதில், நான் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருவதால் தான் மும்பைக்கு வந்துவிட்டேன். மேலும், என் பிள்ளைகள் மும்பையில் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். மேலும், நன்றாக படித்து வருகிறார்கள். நான் மும்பையில் பிள்ளைகள் சென்னையில் இருந்தால் அவர்களுடைய படிப்புக்கு சரிப்பட்டு வராது என்பதற்காகத்தான் அவர்களையும் என்னுடன் அழைத்து சென்று விட்டேன். ஹிந்தி படங்களில் கமிட்மெண்ட்ஸ் முடிந்தவுடன் மீண்டும் சென்னைக்கு வந்து விடுவோம் என கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் அவர்களது மகள் தியா விளையாட்டு நிகழ்ச்சியில், கலந்து கொண்டு இருந்தார். தற்போது, சூர்யா, ஜோதிகா வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.