சினிமா / TV

கோவையில் மங்களகரமாக தொடங்கிய சூர்யாவின் 45 பட பூஜை..படத்தின் தலைப்பு இது தானா..!

கங்குவா படத்தின் தோல்வி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா,கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான கங்குவா திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியானாலும், அது ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

சூர்யா 44 மற்றும் புதிய படம் சூர்யா 45

இதைத் தொடர்ந்து, சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பின்பு, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சூர்யா 45 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதையும் படியுங்க: தனுசுடன் மோத ரெடி..வில்லனாக மாறும் பிரபல ஹீரோ… “இட்லிக்கடை” படத்தின் அப்டேட்….

இந்த படத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை திரிஷா, சூர்யாவுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.மேலும், சூர்யா 45 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கு மேலும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன.

பூஜை நிகழ்ச்சி

இத்திரைப்படத்தின் பூஜை இன்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் துவங்கியது. இதில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இந்த பூஜை நிகழ்ச்சி பிறகு, சில ரசிகர்கள் கிண்டலடித்து, “இந்த படத்திற்கு மாசாணி அம்மன் என்ற டைட்டில்தான் வைக்கப் போகிறாரா?” என்று புகழ்ந்து வருகின்றனர். இதனால் படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.