அத கூட சுயமா பேச தெரியாதா? விஜய் பேசியதை அப்பட்டமா காப்பியடித்த சூர்யா – வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக இருந்து வரும் நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டியும் அரசியலில் இறங்கியுள்ளார். மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தனது திரைப்பட விழாக்களை கூட அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறார் நடிகர் விஜய்.

அப்படித்தான் லியோ ஆடியோ லான்ச்சில் அவர் பேசிய மாஸான ஒரு கருத்தை அப்படியே காப்பி அடித்து சூர்யா பேசியிருக்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்ஸ் சூர்யாவை பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை சூர்யாவின் அகரம் கட்டளையுடன் இணைத்து பல உதவிகளை தற்போது செய்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் 45 வது விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிவக்குமார் ,சூர்யா ,கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா..” நீங்கள் என்னவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுங்கள்… பெரிதாக கனவு காணுங்கள்… கண்டிப்பாக உங்கள் கனவு நனவாகும்…அதனால் உங்களுடைய எண்ணங்கள் நிஜமாக மாறும் என பேசியிருக்கிறார்.

இவர் பேசிய இதே வார்த்தையை நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்னர் ‘லியோ” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “பெருசா கனவு காணும் நண்பா…. அதையெல்லாம் ஒருத்தரும் ஒன்னும் சொல்ல முடியாது” என்ன பேச அந்த அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்திருக்கும். விஜய்யின் இந்த மாஸான பேச்சை சூர்யா அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்து பேசியிருக்கிறார். அத கூட சுயமா பேச தெரியாதா? என நெட்டிசன் ட்ரோல் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.