தமிழ் சினிமாவின் முன்னணி இ நடிகரான சூர்யா டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார். மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை படத்திற்கு படம் வேறுபடுத்தி காட்டும் சூர்யாவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்து சக்கைப்போடு போட்ட திரைப்படம் சூரரை போற்று.
அடுத்ததாக தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி ” புறநானுறு” என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.