சூர்யா படத்தில் தான் நல்லவரு… உண்மை முகத்தை கிழித்த பிரபலம் – வீடியோ!

Author: Shree
10 May 2023, 9:04 am
surya
Quick Share

உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சூர்யா காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் 8 ஆண்டுகள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துக்கொண்டதாக கேள்விப்பட்டிருப்போம்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா குறித்து பிரபல விமர்சகர் செய்யார் பாலு பேட்டி ஒன்றில், சூர்யா திரைப்படங்களில் மட்டும் தான் நல்லவர் போல் நடிப்பார். படங்களில் மட்டும் ஏழைகளுக்கு அரசனாக இருந்து உதவிகள் பல செய்திடுவார். ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் அதற்கு அத்தாட்சி. ஆனால் அவர் உண்மையில் வேறு முகம் கொண்டவர்.

தமிழருக்காக குரல் கொடுக்கிறேன் என கூறிவிட்டு இந்தி தெரியாது போடா என போராட்டம் செய்துவிட்டு மும்பையில் பிசினஸ், ஹிந்தி படங்களில் கவனம் என கும்பத்தோடு அங்கயே சென்று செட்டில் ஆகிவிட்டார். ஒருமுறை… மும்பை ஏர்போர்ட்டில் தனது மகளையும் , மகனையும் போட்டோ எடுக்காதீங்க என திட்டி எச்சரித்த சூர்யா கீழடியில் விதிகளை மீறி தான் ஒரு நடிகர் என்பதை முன்னிறுத்தி கீழ்த்தரமாக நடந்துக்கொண்டது அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தோடு போஸ் கொடுப்பதற்கு மட்டும் நல்லா இருக்கா? இதிலிருந்தே தெரிகிறது அவர் வாழ்க்கையிலும் நடிகர் என்று என சூர்யாவை மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/reel/756021212843381?fs=e&s=7MtrtK&mibextid=z9DgKg

Views: - 1499

19

14