தெத்து பல்லழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வேதா ரெட்டி. ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராயில் பிறந்த இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி அதன் பின்னர் சினிமா துறைக்கு வந்தார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் அனைவரது கவனமும் அவரை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க துவங்கியது. வடகறி, ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 2018ல் இவர் மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை காதலித்து மணந்தார். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டே தனது கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலீட் செய்தார்.
இதையடுத்து ஸ்வாதி கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக ஒரு விளக்கம் கொடுத்தார். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கணவரின் புகைப்படங்களை ஸ்வேதா ரெட்டி திடீரென டெலீட் செய்தார்.
இதனால் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் விவாகரத்து குறித்து வரும் செய்திகள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ஸ்வாதி ரெட்டி, “சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் ஒருவேளை ஏதாவது இருந்தால் நானே அதை சொல்லுவேன் என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். அவரின் பதிலை வைத்து பார்க்கும் போது விவாகரத்தால் விரக்தியில் இருப்பதாகவும், நிச்சயம் விவாகரத்து ஆகிவிட்டது போல் தான் தெரிகிறது என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.