இந்திய சினிமாவின் பிரபல நடிகையான தமன்னா பாலிவுட்டில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 உள்ளிட்ட பாலியல் உறவு குறித்த திரைப்படங்களில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 நெட்பிலிக்சில் இன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தமன்னாவை மோசமாக விமர்சித்து வருவதோடு, 2016 ஆண்டு பேட்டி ஒன்றில் நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று என்று சொன்ன தமன்னா இப்படி பாலியல் உறவு கொண்ட படத்தில் நடித்திருப்பது அவமதிக்கத்தக்கது என ட்விட்டரில் பலர் கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர்.
தற்போது இதற்கு பதிலளித்துள்ள நடிகை தமன்னா , 2023ல் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்னைப் பற்றி கேலி, விமர்சனம் செய்யும் ட்விட்டர் மாமாக்களே…. படங்களில் ஹீரோக்கள் கதாநாயகியிடம் வீண் பேச்சு பேசுவதையும், ரொமான்ஸ் செய்வதையும் பார்த்து கைதட்டி சிரித்து அவர்களை சூப்பர் ஸ்டார் ஆகி விடுகிறார்கள். ஆனால். ஒரு பொண்ணு அப்படி நடித்தால் அவளுடைய கேரக்டரை மதிப்பிடுகிறீர்கள். இது ஏன் என்று எனக்கு புரியவில்லை?
நான் என்னுடைய 18 வருட திரைத்துறையில் முத்தமிட்டதில்லை. ஆனால், ஒரு நடிகையாக ஏன் விதிகளை போட வேண்டும் என்று யோசித்தேன். நான் ஏன் நடிகையாக மேலும் வளரக்கூடாது என்று என்னை நானே கேட்டபோது தான் முத்த காட்சி பற்றிய விதி எனக்கு அர்த்தமற்றது என்று புரிந்தது. அதனால்தான் நான் அந்த விதியை மீறினேன். அது மட்டும் இல்லாமல் என்னுடைய காதலர் விஜய் வர்மா இந்த சமூகத்தை நன்கு அறிந்தவர்.
ஒரு காதலனாக இந்த சர்ச்சைகளை எல்லாம் அவர் ஒரு விஷயமாகவே பார்ப்பதில்லை. அது அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. செக்ஸ் பத்தி பேசுவதை கூச்சமாக நினைப்பவர்களை முட்டாள்தனமாக நினைக்கிறேன். அதை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு மனிதனுடைய அனைத்து தேவைகளைப் போலவே அதுவும் ஒன்று தான் என்று செம கூலாக தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து விளக்கத்தையும் கூறியுள்ளார் தமன்னா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.