2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.
இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.
கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார். அவர்களின் அவுட்டிங், ரகசிய லிப்லாக் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதி செய்ய பின்னர் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர்.இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.
தமிழ், தெலுங்கு , இந்தி மொழி படங்களில் படு பிசியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா தற்ப்போது படு கவர்ச்சியான உடையணிந்து போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். இந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்ஸ் தாறுமாறான கமெண்ட்ஸ் செய்து எக்குத்தப்பாக வர்ணித்துள்ளனர்.
இதனிடையே, கடைசியாக தமன்னா நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படு கிளாமராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை தமன்னா ஜெயிலர் படத்திற்க்கு பின்பு தனது சடாரென சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். ஒரு படத்திற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா பள்ளியில் படிக்கும் போது தோழிகளின் வீட்டிற்கு செல்வேன். அப்போது, சிடி பிளேயரில் படங்களை பார்க்கும் பழக்கம் இருந்தது. அதில், 18 பிளஸ் படங்களின் சிடியும் இருந்தது அதை வேறு வழியில்லாமல் அவர்களுடன் சேர்ந்து பார்த்தேன் என தமன்னா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.