தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை மூலம் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் வடிவேலு. ஒரு நகைச்சுவை நடிகராக பல படங்களில் நம்மை கவர்ந்த வடிவேலு தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி வெற்றி பெற்றது. அரசியல் பிரச்சினையின் காரணமாக வடிவேலு சில மாதங்கள் எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் ஒதுங்கி இருந்தார்.
அவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருந்தது. மீண்டும் அவர் எப்போது திரைப்படத்தில் நடிப்பார் என்ற அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் திரும்பியுள்ளார். இதையடுத்து வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தடுத்த படங்களில் இந்த சம்பளத்தை இன்னும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் ஹீரோக்கள் பலர் 10கோடி ரூபாய்க்கு குறைவான சம்பளத்தை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் ஹீரோக்களை விட சம்பள விஷயத்தில் பலே கில்லாடியாக வடிவெலு மாறி வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.