தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தமிழ் சினிமாவில் இன்று வரை அதே புத்துணர்ச்சியுடன் மாசான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இவர் கிட்டத்தட்ட 171 படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவிற்கு இவர் வருகை தந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு சந்தோஷமான தகவலை பகிர்ந்துள்ளார்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் பல ரீரிலீஸ் படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது,அந்த வகையில் ரஜினிகாந்தின் பாபா,கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு,ஆளவந்தான்,சூர்யா நடித்த வாரணம் ஆயிரம்,அஜித் நடித்த பில்லா,வாலி,விஜயின் கில்லி என பல படங்கள் ரீரிலீஸாக திரைக்கு வந்தன.சமீபத்தில் கூட ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி படம் வெளியாகி வசூலை அள்ளியது.
இதையும் படியுங்க: பெரும் சோகத்தில் ரிலீஸ் ஆகும் மதகஜராஜா…படத்தில் நடித்த பல பிரபலங்களின் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியுமா ..!
அந்த வகையில் தற்போது ரஜினி 50 ஆண்டை கடந்து சினிமாவில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் போது,அவரை சிறப்பிக்கும் விதமாக அவரது நடிப்பில் 150-வது படமாக வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த படையப்பா திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.