வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் ரிலீசான படங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாவது ரசிகர்களிடைய ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என ஒருபுறம் இருந்தாலும் புதுபடங்களை காண தியேட்டருக்கு படையெடுப்பது வழக்கம்.
ஆனால் பல டிவி சேனல்கள் மக்களை டிவி முன்னாடி கட்டிப்போட போட்டி போட்டு புதுப்பட்ங்களை ஒளிபரப்புவார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் தனுஷ் நடிப்பில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான ராயன் திரைப்படத்தை சன் டிவி ஒளிபரப்புகிறது.
அதே போல கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தியன் 2 படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.
விஜய் சேதுபதி நடித்து 100 கோடி ரூபாய் வசூல் செய்த மகாராஜா படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
அதே போல செம ஹிட் ஆன டிமாண்டி காலனி 2 திரைப்படம் வரும் 31ஆம் தேதி ஜி தமிழ் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாக உள்ளது.
தீபாவளி அன்று வீட்டிலேயே இருந்துவிடலாம் போல என சினிமா ரசிகர்கள் பேசுகின்றனர். அதே போல கோட், வேட்டையனும் போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கும் என விமர்சிக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.