நட்சத்திரம் நகர்கிறது படத்தின் தோல்வியை அடுத்து பா ரஞ்சித் விக்ரமை ஹீரோவாக வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் ரஞ்சித் பேசுகையில், விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்த பிறகும் ஒரு சண்டைக் காட்சி வைத்தேன். அதெல்லாம் அவரது முகத்தை பார்க்காமல் மானிட்டரில் மட்டும் பார்ப்பேன். ஷார்ட் முடிந்ததும் எனது உதவி இயக்குனர்களில் யாரையாவது அழைத்து அவருக்கு ஓகேயா என பாத்துட்டு வாங்கன்னு சொல்லுவேன். அவர்கள் சென்று பார்த்துவிட்டு சார் ஓகே என்று சொல்கிறார் என்பார்கள்.
ஆனால், அவருக்கு வலித்துக் கொண்டுதான் இருக்கும். நானே ஓகே சார் இன்னொரு ஒன் மோர் போகலாம் என்று கேட்பேன். அவ்வளவு கொடுமைப்படுத்தினேன் சாரி விக்ரம் சார் என்றும், பார்வதி பேசும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஞ்சித் யாருடன் பேச மாட்டார் என்று சொன்னார். அது உண்மைதான் ஏனெனில், இந்த படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தார்கள்.
அந்த உழைப்புக்கு பதிலாக படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால், யாரிடமும் பெரிதாக பேசவே இல்லை. யாராவது மயக்கம் போட்டு விழுந்தால், கூட அவர்களை கண்டுக்க மாட்டேன். அந்த அளவுக்கு கருணை இல்லாமல் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பா ரஞ்சித் பேசியிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.