தமிழ் சினிமாவின் தனித்துவமான இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இவரது பாடல்கள் வெளிவரும்போதெல்லாம் அவை டிரெண்டிங்காக ஆவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் “ரெட்ரோ” திரைப்படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற “கனிமா” பாடல் டிரெண்டிங் பாடலாக அமைந்தது. அப்பாடலை பலரும் ரீல்ஸ் செய்து வைரல் ஆக்கினார்கள். இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரையும் நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது.
“நேற்று கொலும்புவின் தெருக்களில் சாதாரணம் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு பதின்வயதைச் சேர்ந்த ஒருவர் திடீரென ஓடி வந்து ‘உதித் நாராயணன் சார், உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றார். என்னை பாடகராக அங்கீகரித்ததற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன்” என நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.