அப்போ எல்லாமே நடிப்பா?.. கண்ணீர்விட்டு நாடகமாடிய சமந்தா.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. அவ்வப்போது வடமாநில மொழிப் படங்களிலும் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா’ எனும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான யசோதா படப்பிடிப்பின் போது சமந்தாவுக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வலியோடு இந்த படத்திற்கான டப்பிங்கை சமந்தா பேசிய புகைப்படங்கள் வெளியானதையடுத்து அவரது அர்ப்பணிப்பை எல்லோரும் பாராட்டினர்.

இந்த சூழ்நிலையில், சமந்தா நடித்த ‘சகுந்தலம்’ படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வருவதோடு, பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, flash இல்லாமல் போட்டோ எடுக்குமாறு புகைப்படக் கலைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை கேட்டகாமல் சமந்தாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். இதனால் தனது கண்களை கையில் வைத்து மறைத்து சமந்தா சமாளித்துக்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘மயோசிடிஸ் நோய் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், எலும்புகள் பலவீனமாகி சோர்ந்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் சமந்தா பேசியுள்ளார். சில நாட்களில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்ததாகவும், நான் வேடிக்கைக்காகவும் ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவதில்லை எனக் கூறிய அவர், வெளிச்சம் உண்மையில் என் கண்களைப் பாதிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவதுடன், அவருக்கு சிம்பத்தி ஸ்டார் சமந்தா என்றும் பட்டத்தையும் கொடுத்துள்ளனர். அதாவது, இந்த வாரம் முழுவதும் உங்கள் அன்பில் இந்த படத்தை விளம்பரப்படுத்த ஆவலாக இருந்ததாகவும், ஆனால், தொடர்ந்து இருந்த வேலைகளாலும் தற்போது எனக்கு இருக்கும் காய்ச்சல் காரணமாகவும் என்னுடைய குரலும் போய்விட்டதாக குறிப்பிட்டிருந்தார். எனவே சகுந்தலம் குழுவுடன் நீங்கள் அனைவரும் பங்குகொள்ளும் எனக் கூறியிருந்தார்.

சமந்தாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கூறினாலும், சிலரோ, ஒவ்வொரு முறை படம் ரிலீஸ் ஆகும் போது, இதுபோன்று தனக்கு பிரச்சனை என்று கூறி சிம்பத்தியை சமந்தா உருவாக்க முயற்சிப்பதாக விமர்சிக்கின்றனர்.

சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது சமந்தா தனக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டார். ஆனால் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள Citadel திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை பார்க்க தற்போது சமந்தா லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் மகிழ்ச்சியாக சுற்றி வருகிறார் என்று தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

13 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

14 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

14 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

15 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

16 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

16 hours ago

This website uses cookies.