தெலுங்கு திரைப்பட நடிகர்கள் ராணா டகுபதி,விஜய் தேவரகொண்டா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா என்பவர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதை அடுத்து,பல இளைஞர்கள் அந்த செயலிகளில் பணம் முதலீடு செய்து பெரியளவில் இழந்துள்ளனர்.தானும் இந்த செயலிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த விளம்பரங்களை நம்பி பலரும் நஷ்டமடைந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: நாளை ஓடிடியில் குதிக்கும் படங்கள்…எந்த படத்துக்கு நீங்க வெயிட்டிங்.!
மேலும்,பணத்தேவையால் மக்கள் சூதாட்ட செயலிகளில் முதலீடு செய்யும் சூழல் உருவாகியுள்ளதோடு,இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் பெரிய தொகை பெற்றுள்ளனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ராணா டகுபதி,விஜய் தேவரகொண்டா,பிரகாஷ் ராஜ்,நிதி அகர்வால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும்,சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்களும் சேர்ந்து மொத்தம் 25 பேருக்கு எதிராக ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.