தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் வைகை புயல் வடிவேலு.
இதனிடையே, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி விடுவதற்கு முக்கிய காரணம் வடிவேலு நடிப்பு வராத நடிகர்கள், மற்றும் நடிகைகளையும் நடிக்க வைத்து தனது திரைப்படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்டி விடுவாரார் என நடிகை பிரியங்கா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
நடிகை பிரியங்கா காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் ஒரு வாய் பேச இயலாத பெண்ணாக நடித்த அந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பேருந்தில் ஏறி அனைத்து பெண்களுக்கும் காதல் கடிதம் கொடுக்கும் காமெடி மக்களால் தற்பொழுது வரை மறக்க முடியாது என்றுதான் கூறப்படுகிறது.
சினிமாவிற்காக நடிகை பிரியங்கா தனது நிஜமான பெயரை மாற்றி அமைத்துள்ளார். இவரது உண்மையான பெயர் சந்திரலேகா என இவர் தெரிவித்து உள்ளார். நடிகை பிரியங்கா மருதமலை திரைப்படத்தில் நடிகர் வடிவேல் காவல்துறை அதிகாரியாக நடித்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு ஐந்து புருஷன் என ஒரு காமெடி வரும் அந்த காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தான் வரும்.
மேலும், இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த நடிகை பிரியங்கா தற்போது ஒரு சில திரைப்படங்களையும் கைப்பற்றி நடித்து வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை நடிகர் வடிவேலு சார் தான் பிரபலமாக்கி விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.