தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற பங்கு இளையராஜாவுக்கு உண்டு. அவர் அமைத்த பாடல்கள் உலகத்தையே ரீங்காரமிடச் செய்தது என்று கூறினால் அது மிகையல்ல.அவருடைய இசையில் பாடத் தவம் கிடந்த எத்தனேயோ பாடகர்கள் உள்ளனர். அவர் அறிமுகம் செய்த எத்தனையோ பாடகர்களும் உள்ளனர்.
இளையராஜாவுக்கு ஓவியம் என்றால் பிடிக்கும், குறிப்பாக பிரபல ஓவியரான சிற்பியின் ஓவியங்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.
ஒரு முறை தனது இஷ்ட தெய்வமான அன்னை மூகாம்பிகையை ஓவிய சிற்பியின் கை வண்ணத்தில் வரைய வைக்க இளையராஜா ஆசைப்பட்டுள்ளார்.
அதற்காக தனது உதவியாளரை அழைத்து தனக்கு மூகாம்பிகை ஓவியத்தை வரைந்து கொடுக்க முடியுமா எனவும் எவ்வளவு தொகை எனவும் சிற்பியிடம் கேட்டு வரும் படி கூறியுள்ளார்.
உதவியாளரும் ஓவியர் சிற்பியை சந்தித்து நடந்ததை கூறியுள்ளார். பின்னர் இளையராஜாவிடம் மீண்டும் வந்த உதவியாளர், அந்த ஓவியர் சுத்தம் விவரம் இல்லாத ஆளு, அவர் ஓவியம் வரைய அதிக தொகை கேட்கிறார், அப்படி என்ன அற்புதமான ஓவியத்தை வரைந்துவிட போகிறார், அவரு பேசற விதமே சரியலில் நான் கேட்கிற பணத்தை இளையராஜா கொடுப்பானா என கேட்கிறார், இப்படியெல்லா உங்களை பேசுறாரு, அவரு வேண்டாம் நாம வேற யாராவது பாத்துக்கலாம் என கூறியிருக்கிறார்.
உடனே இளையராஜா, நீ திரும்பவும் சிற்பி வீட்டுக்கு போ அவர் என்ன தொகை கேட்கிறாரோ அதை கொடுத்துவிடுவதாக சொல் என கூறியுள்ளார்.
உடனே உதவியாளர், அவர் சொன்ன தொகைக்கு எல்லாம் ஒத்துக்க வேண்டாம் நான் பேசி பாதி தொகைக்கு முடிச்சு தரேன் என கூற, கடுப்பான இளையராஜா உன்னை நான் அப்படி பேசி முடிக்க சொன்னேனா, அவருடைய ஓவியத்திற்கு விலை நிர்ணயம் செய்ய நீயும் நானும் யாரு? அவருகிட்ட போய் என்ன தொகைனு கேளு நான் கொடுக்கறேன் என கூறியுள்ளார்.
உடனே சிற்பியும் ஓவியம் மிகச்சிறப்பாக வரைந்து தர, பின்னர் இளையராஜாவும் சிற்பியும் சிறந்த நண்பர்கள் ஆனார்கள், இன்று வரை ஓவியர் சிற்பி வரைந்த மூகாம்பிகையின் ஓவியம்தான் இளையராஜா பூஜை அறையில் இருக்கிறது,.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.