130 ரூபாய் பணத்தை திருடி அரை டவுசருடன் சென்னைக்கு வந்து பிளாட்பாரத்தில் தூங்கிய இயக்குநர் : தூக்கிய போலீசார்!!

சினிமா கனவுகளோடு சென்னைக்கு நுழைந்த எத்தனையோ பேர், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு, கடின உழைப்புக்கு பின் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

அதிலும், தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் நடிக்க ஆர்வம் கொண்டு நடிப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். அப்படி ஒரு இடத்தினை செய்து வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி.

ஆரம்பத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் சீரியலில் இயக்க வாய்ப்பு பெற்று அதன்பின் படங்களை இயக்க ஆரம்பித்தார். படங்கள் எதுவும் ஓடவில்லை என்பதால் மீண்டும் சீரியலை இயக்கச்சென்றார்.

அப்படி சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்து பின் இயக்கும் வாய்ப்பு பெற்று தற்போது நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஆரம்பகால சினிமாவில் பட்டக்கஷ்டத்தை பகிர்ந்துள்ளார்.

சினிமா ஆசையால் என்னுடைய அப்பாவின் 130 ரூபாய் பணத்தை திருடி சென்னைக்கு அரை டிரெளசருடன் எங்கு செல்வது கூட தெரியாமல் வந்தேன். அப்போது ஜெமினி பாலத்திற்கு கீழ் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்கினேன்.

அப்போது ஒரு போலிஸ் அதிகாரி என்னை எழுப்பி, இங்கெல்லாம் தூங்க கூடாது என கூறி ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்றார். அங்கு எனக்கு செய்திதாளை விரித்து அங்கு படுக்க சொன்னார். அதன்பின் காலை டீ வாங்கி கொடுக்க நானும் சினிமா பற்றிய ஆசையை கூறினேன்.

அதற்கு அந்த போலிஸ், இப்போது நீ சினிமாவில் நுழைய முடியாது, வீட்டிக்கே போ என்று கூறினார். அதற்கு நான் தி நகருக்கு எப்படி செல்லவேண்டும் என்று மட்டும் கேட்டு அங்கு சென்றேன் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.