தயாரிப்பாளரான ஜெயமுருகன் மனிதன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, 1995 ஆம் ஆண்டு மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து சிந்து பாத் திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
அந்த படத்தைத் தொடர்ந்து, பாண்டியராஜன்,கனகா நடித்த புருசன் எனக்கு அரசன் படத்தை தயாரித்தார். இந்த படமும் வெற்றி பெற ரோஜா மலரே, அடடா என்ன அழகு, தீ இவன் ஆகிய படங்களை தயாரித்தார்.
அதுவரை தயாரிப்பாளராக இருந்த ஜெயமுருகன், முரளி, அருண் பாண்டியன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த ரோஜா மலரே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இப்படம், வெளியாகி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடடா என்ன அழகு, தீ இவன் படத்தை தயாரித்த இவர் அந்த படத்திற்கு இசையும் அமைத்து இருந்தார். மேலும், லிவிங்ஸ்டன், உதயா மற்றும் விந்தியா நடித்த பூங்குயிலே என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால், அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது
இதையும் படியுங்க: விவாகரத்து பெற்றாலும் நான் அவரை காதலிக்கிறேன்… மனம் திறந்த பிரபல நடிகரின் மனைவி!
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டு இருந்த ஜெயமுருகன் தற்போது சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரின் உடல் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது .
ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் தெற்கு மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் அங்கு தகனம் செய்யப்பட்டது. இவரின் திடீர் மறைவு திரைத்துறை மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.