கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார். இந்த நிலையில் “96 பார்ட் 2” திரைப்படத்திற்காக பிரேம் குமார் எழுதிய கதை விஜய் சேதுபதிக்கு பிடிக்கவில்லை, ஆதலால் இத்திரைப்படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை இயக்குனர் அணுகினார் என்று தகவல்கள் வெளிவந்தன.
இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆன நிலையில் இச்செய்தியை குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் பிரேம் குமார். “இது வழக்கம் போல ஒரு தவறான செய்தி. 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டுந்தான் 96 இரண்டாம் பாகத்தை எடுக்க முடியும். நடிகர் திரு.பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் 96 பார்ட் 2 திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.