ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிம்பு நடித்துக்கொடுத்த திரைப்படம்தான் “வெந்து தணிந்தது காடு”. சிம்பு ஐசரி கணேஷிற்காக மூன்று திரைப்படங்களில் நடித்துக்கொடுப்பதாக ஒப்பந்தமானார். அதன் படி “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்தார்.
ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டார். இதனை தொடர்ந்து சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தில் ஒப்பந்தமானார். “கொரோனா குமார்” திரைப்படத்திற்கு சிம்பு 4 கோடி ரூபாய் முன்பணமாக பெற்றிருந்ததாக ஐசரி கணேஷ் கூறினார். மேலும் “முன்பணம் வாங்கிக்கொண்டு எனது திரைப்படத்தில் நடித்துக்கொடுக்காமல் சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்கிறார். அவருக்கு ரெட் கார்ட் அளிக்கவேண்டும்” என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
எனினும் இது குறித்து பின்னாளில் ஒரு பேட்டியில் பேசிய ஐசரி கணேஷ், “சிம்புவை தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று சொல்லவில்லை. எனது திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு தக் லைஃப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறினேன். அவரும் விரைவில் நடித்துக்கொடுப்பதாக கூறியுள்ளார். இது அண்ணன்-தம்பிக்குள் நடக்கும் பிரச்சனைதான். சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும்” என கூறினார்.
கடந்த மே 9 ஆம் தேதி ஐசரி கணேஷின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் சிம்பு இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் சிம்பு ஐசரி கணேஷ் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளாததன் காரணம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஐசரி கணேஷ் தனது மகளின் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழை சிம்பு வீட்டிற்கு அளிக்க சென்றபோது சிம்பு வீட்டில் இல்லையாம்.
எனினும் ஐசரி கணேஷ் தனக்கு தனிப்பட்ட முறையில் ஃபோனில் அழைத்து “கல்யாணத்துக்கு வந்துடுங்க தம்பி” என்று கூப்பிடுவார் என சிம்பு நினைத்தாராம். ஆனால் கடைசி வரை அவர் ஃபோன் செய்யவே இல்லையாம். இதனால்தான் சிம்பு ஐசரி கணேஷ் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் வருகிறது.
வளர்ந்து வரும் ஹீரோ “லவ் டூடே” திரைப்படத்தின் கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பிரதீப் ரங்கநாதன். அத்திரைப்படம் வேற லெவலில் ஹிட்…
தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம்…
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள் மத்தியில் போதை தரும் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையும் படியுங்க:…
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,…
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம்…
பொள்ளாச்சி வழக்கில் தண்டனை கிடைத்ததற்கு நான் தான் காரணம் என இபிஎஸ் பொய் சொல்லி வருவதாக உதகையில் முதலமைச்சர் ஸ்டாலின்…
This website uses cookies.