சினிமா / TV

சூர்யாவுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிய வெற்றிமாறன்? வாடிவாசல் டிராப் ஆனதுக்கு இதான் காரணமா?

டிராப் ஆன வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. இதற்கிடையில் சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் பிசியாகி விட்டார். 

இத்திரைப்படங்களின் வெளியீட்டிற்குப் பிறகாவது “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இத்திரைப்படம் டிராப் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இத்திரைப்படம் டிராப் ஆனதற்கான காரணம் குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 

மழுப்பிய வெற்றிமாறன்

அதாவது வெற்றிமாறனை அழைத்த சூர்யா, “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு எத்தனை நாட்கள் போகும் என கேட்டாராம். அதற்கு வெற்றிமாறன் “படப்பிடிப்பை முதலில் தொடங்கலாம். அது எப்போது முடிகிறதோ அப்போது முடியட்டும்” என்று மழுப்பலான ஒரு தெளிவில்லாத பதிலை கூறினாராம். 

ஆனால் சூர்யாவோ, “இரண்டு வருடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை உங்களால் முடிக்க முடியுமா?” என்று கேட்டாராம். மேலும் “இத்திரைப்படத்தை ஒரு பாகமாகவே முடித்துவிட வேண்டும், இரண்டு பாகங்கள் எடுக்கக்கூடாது” எனவும் கூறினாராம். 

இவ்வாறு “படப்பிடிப்பை எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? என்று தெளிவான ஒரு முடிவை கூறுங்கள், அதன் பின் நான் கால்ஷீட் நாட்களை தருகிறேன்” என சூர்யா கூறினாராம். ஆனால் வெற்றிமாறன் எதற்குமே தெளிவான பதிலை கூறவில்லையாம். இதன் காரணமாகத்தான் “வாடிவாசல்” திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பம்.. ரசாயனம் கலந்த பாமாயிலை வழங்கிய பிரபல நிறுவனம்!

திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர்…

9 minutes ago

உடைந்தது நட்பு… டிரம்புக்கு எதிராக தனிக்கட்சி தொடங்கும் எலான் மஸ்க்..!!!

அமெரிக்க அதிபர் கொண்டு வந்த Big Beautiful Bill என்ற வரிக்குறைவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.…

1 hour ago

டீக்கடையில் வேலை செய்தவரை வலை வீசி தேடி பிடித்து கைது செய்த போலீஸ்.. அதிர்ச்சி பின்னணி.!!

திண்டுக்கல், நரிப்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஸ்டாலின்(38). இவர் சமூக வலைதளங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து பதிவு…

2 hours ago

சூர்யாவுக்காக வைத்திருந்த கதை! ஆமிர்கானுக்கு தூக்கி கொடுத்த லோகேஷ் கனகராஜ்? இதான் மேட்டரா?

லோகேஷ் கனகராஜ்-ஆமிர்கான் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர்…

2 hours ago

மகன் இறந்த 3 மாதத்தில்..பாரதிராஜா வீட்டில் அடுத்த சோகம்.. ஒரு மனுசனுக்கு இப்படியா நடக்கணும்..!!

தமிழ் சினிமாவுக்கு அடையாளம் கொடுத்த இயக்குநர்களின் இயக்குநர் பாரதிராஜா பங்கு பெரும்பங்கு. இவர் இயக்கிய படங்கள் கிராமத்து மண்வாசனையுடன் வீசி…

3 hours ago

ஏமாற்றமடைந்த சிவகார்த்திகேயன், மன்னிப்பு கேட்ட ஆமிர்கான்? இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்ன?

ஆமிர்கான் படத்தில் சிவகார்த்திகேயன் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் ஆமிர்கான். எனினும் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த எந்த திரைப்படமும்…

3 hours ago

This website uses cookies.