சினிமாவில் வாய்ப்பு என்பது அரிதான விஷயம். திறமையை வெளிப்படுத்தி உச்சம் தொடுவது அதை விட அரிது. எத்தனையோ பேர் திறமையிருந்தும் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் உள்ளனர்.
ஆனால் தோற்றாலும், ஜெயித்தாலும் அது சினிமா மட்டும்தான் என தனது திறமை, கடின உழைப்பு மூலம் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஆரம்ப கட்டத்தில் விக்ரம் நடித்து வந்தார். ஆனால் எந்த படமும் ஹிட்டாக அமையவில்லை. 99ல் வெளியான சேது படம் திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது வரை முன்னணி நடிகரகா இருக்கும் விக்ரம் அனைத்து இயக்குநர்களின் படத்திலும் நடித்துவிட்டார். ராவணன் படம் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்தார். என்ன நடிப்பு என மெச்சும் அளவுக்கு விக்ரம் வேறு பரிணாமத்தில் நடித்திருந்தார்.
இந்த ஜோடி மீண்டும் மணிரத்னம் படமான பொன்னியின் செல்வனிலும் அமைந்தது. இரண்டு படங்களிலும் ரெண்டு பேரும் ஜோடி சேரவில்லை. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில்தான் ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக நடிக்க வேண்டிய படத்தின் பற்றி தகவல் கிடைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வேண்டியவர் ஐஸ்வர்யா ராய்.
ஐயங்கார் வீட்டு பெண்ணாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இறுதியில் சதாவுக்கு வாய்ப்பு போனது. இந்த தகவல் அந்நியன் படம் குறித்து விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.