தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.
முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மகள் அனுஷ்கா டென்னிஸிலும் ஆத்விக் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்கள். அவ்வப்போது அவர்கள் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இதனிடையே அஜித் தன் மகள் அனுஷ்காவின் பிறந்தநாளை அண்மையில் துபாயில் குடும்பத்தினரோடு கொண்டாடினார். அங்கு சொகுசு Boat ஒன்றில் அஜித் தனது குடும்பத்தினரோடு செல்ல அவரின் ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடித்து தல தல என்று கத்தி கூச்சலிட்டனர்.
உடனே அஜித் அவர்களுக்கு கையசைத்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியது. மேலும், அஜித் பார்ட்டியில் வெளிநாட்டு ரசிகையுடன் ஆடிய நடன வீடியோவும் இணையத்தில் வைரலாகியது. அதையடுத்து ஷாலினி தனது மகள் அனுஷ்காவின் பிறந்தநாளில் கேக் வெட்டி மகன் ஊட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ” ஹேப்பி பர்த்டே மை பேபி” என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளினார்.
பின்னர் துபாயில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய போது ரசிகரின் எல்லைமீறிய செயலால் கடுப்பான அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது. ஆம் அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு அவரின் குடும்ப கொண்டாட்டத்தை வீடியோ எடுத்த ரசிகரின் போனை பிடிங்கி அந்த வீடியோக்களை டெலீட் செய்தார் அஜித் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் அன்று அஜித் ஏன் அப்படி நடந்துக்கொண்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தன் மகளை திருட்டு தனமாக வீடியோ எடுத்துள்ளதை அறிந்து ஒரு தந்தையாக அஜித் மிகுந்த கோபம் அடைந்து தான் அவரிடம் இருந்து செல்போனை பிடிங்கி அந்த வீடியோவை டெலீட் செய்தாராம். ஆனால், அஜித் மோசமானவர் என்று தவறாக செய்தி பரப்பிவிட்டார்கள்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.