கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண்.
கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் ராஜ்கிரண் அஜித் குறித்து இதுவரை யாருக்கு தெரியாத விஷயம் ஒன்று கசிந்துள்ளது. அதாவது அஜித் வெகு சிலருடன் மட்டுமே மிகவும் நெருங்கி பழகுவார். அவர்களுடன் அரட்டை அடிப்பது, ட்ரிப் செல்வது என நண்பர்கள் பழகுவது போன்றே பழகுவாராம். அந்த லிஸ்டில் இருந்தவர் தான் நடிகர் ராஜ்கிரண்.
ராஜ்கிரணின் குணத்தை பார்த்து அவருடன் நெருங்கி பழகிய அஜித் ஒரு கட்டத்தில் அப்பாவை போன்றே பார்த்துக்கொண்டாராம். திடீரென்று ராஜ்கிரணை பார்க்க வேண்டும் என்று தோன்றினால், அஜித் நேராக ராஜ்கிரண் இருக்கும் படப்பிடிப்பிற்கே சென்று விடுவார். அப்படித்தான் அவர்களது உறவு சென்று கொண்டிருந்தது. அது போன்ற சமயத்தில் தான் ராஜ் கிரண் அஜித்திடம் ஒரு உதவி கேட்டுள்ளார். அதாவது ராஜ்கிரண் திரைப்படங்கள் எடுத்து கடனாளியாகி லட்ச கணக்கில் வட்டி கட்டிக்கொண்டிருந்தாராம்.
அந்த சமயத்தில் தன்னுடன் நெருங்கி பழகும் டாப் ஹீரோவான அஜித்தை வைத்து ஒரு படம் எடுத்து எல்லா கடனையும் அடைந்துவிடலாம் என எண்ணி அவரிடம் வெளிப்படையாகவே கேட்டுள்ளார் ராஜ்கிரண். அவ்வளவு தான் அன்றில் இருந்து அஜித் ராஜ் கிரண் உடனான உறவையே முறித்துக்கொண்டார். அஜித்தை பொறுத்தவரை தன்னுடன் நெருக்கமாக பழகுபவர் தன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என நினைப்பார் அதனால் ராஜ்கிரண் உறவு முறிந்துவிட்டது என அந்தகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.