சினிமா / TV

நான் சென்றால் ரஜினி எழுந்து நிற்பார்…. நடிகை துஷாரா விஜயன் பேட்டி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தற்போதைய பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் துஷாரா விஜயன். தமிழில் போதை ஏறி புத்தி மாறி திரைப்படத்தில் நடித்து 2019 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். அந்த திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷை பேசி துஷாரா விஜயன் அசத்தியிருப்பார் .

மேலும், ஆர்யாவுடன் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றில் துஷாரா விஜயன் பின்னி பெடல் எடுத்திருப்பார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியதோடு பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவியது வாங்கியது .

மேலும், இவர் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆக தயாராகிக் கொண்டிருக்கும் வேட்டையன் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார் .

முன்னதாக அவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் ரஜினி சார் இன்னும் சினிமா துறையில் புகழின் உச்சத்தில் இருக்க அவருடைய பணிவான குணம் மிகப்பெரிய காரணம். ஆம் இந்த வயசிலும் அவர் எல்லோருக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பார். குறிப்பாக அவரது எனர்ஜி சான்சே இல்ல. அந்த அளவிற்கு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் நடந்துக்கொள்வார்.

இந்த வயதிலும் ரஜினி சார் படத்தின் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் எனர்ஜியாக ஆக்டிவாக காணப்படுவார். அதை பார்க்கும்போதே ரொம்பவும் ஷாக்கிங் ஆகும் வியப்பாகவும் இருக்கும். மேலும் நான் நடித்த நட்சத்திர நகர்கிறது படத்தை ரஜினிகாந்த் சார் பாராட்டினார்.

இதையும் படியுங்கள்:

அது மட்டும் இல்லாமல் என்னுடைய பேட்டிகள், வீடியோக்களை பார்த்ததாக ரஜினி சார் என்னிடம் கூறியிருக்கிறார். ஒரு சூப்பர் ஸ்டார் போலவே நடந்துக்கவே மாட்டார். ரொம்பவும் இயல்பா ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லார் கூடவும் பேசுவார்.

ரஜினி சார் இருக்கும் பக்கம் சென்றால் எழுந்து நின்று கூட எல்லோருக்கும் மரியாதை செய்வார். மேலும் அடுத்தவர்களுக்கு ஷேர் வரும் வரை அவர் நின்று கொண்டே பேசுவார். அந்த அளவுக்கு மிகச்சிறந்த மனிதர் ரஜினிகாந்த். அதனால் தான் சூப்பர் ஸ்டார் என துஷாரா விஜயன் மிகுந்த பெருமையுடன் பேசினார்.

Anitha

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

6 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

7 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

8 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

8 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

9 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.