புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் சிவகுமாருக்கு விருப்பமே இல்லை. ஆனாலும், மகன் சூர்யாவுக்காக வேற்று ஜாதி பெண்ணான ஜோதிகாவை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி , அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு சிவகுமார் நேரில் சென்று விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தாராம். அதற்கு விஜயகாந்த் வர முடியாது என முகத்திற்கு நேராகவே கூறி மறுத்துவிட்டாராம். அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது, விஜயகாந்த் அரசியலில் தீவிரம் காட்டி கட்சி ஆரம்பிக்கும் வேளையில் மும்முரமாக இருந்த சமயமாம் அது.
அந்த நேரத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க கூடாது என பல கட்சி தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வந்த சமயம் அது என்பதால் நான் அங்கு வந்தால் அது பிறருக்கு அசைவுகரியத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே நான் திருமணத்திற்கு வர முடியாது என கூறிவிட்டு திருமணம் முடிந்த பிறகு, சூர்யா மற்றும் ஜோதிகாவை வீட்டில் சென்று சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் அன்பு பரிசையும் கொடுத்தாராம் விஜயகாந்த்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.