சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், நம்பர் ஒன் ஹீரோவாகவும் பார்க்கப்படுபவர். இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ள இவரின், பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருவதால் இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
சினிமா உலகில் வெற்றியை கண்டு வரும் ரஜினி மறுபக்கம் நிஜ வாழ்க்கையில் தனது குடும்பத்துடன் பொழுதை கழிப்பது இமயமலைக்கு போய் வருவதுமாக இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் டாக்டர் காந்தராஜ் இமயமலையை தேடி எதற்காக பலரும் செல்கிறார்கள் என்பது குறித்து சொல்லி உள்ளார்.
அவர் சொல்வது என்னவென்றால்.. தமிழகத்தில் தான் போதை பொருள் சம்பந்தமான செடிகள் அதிகமாக வளர்கிறது என்று கூறினார். அதில் நாமக்கல் மாவட்டத்தில் தான் அதன் விளைச்சல் அதிகமாக இருக்கிறதாம் அதேபோன்று பர்மா, நேபாளம் பகுதிகளில் இந்த செடிகள் அமோக விளைச்சல் கொடுக்கிறது அதனால் தான் சில நடிகர்கள் இமயமலைக்கு சென்று தவம் செய்கிறேன் என கிளம்பி விடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார், அது மட்டுமல்லாமல் அங்கு இந்த போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி தான் தவம் செய்ய முடியும் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் மறைமுகமாக ரஜினியை தான் தாக்கி பேசுகிறார் என பலரும் கூறுகின்றனர் ஏனென்றால் இப்போ இருக்கும் நடிகர்களில் அதிகம் இமயமலைக்கு செல்வது ரஜினி தான். டாக்டர் காந்தராஜ் இவ்வாறு பேசியதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் மது, போதை போன்றவற்றை இவர் முற்றிலுமாக தவிர்த்தார்.
இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.