இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தங்களது வேலை சுமை அதிகமாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரே ஒரு நபரை ஸ்மார்ட் பாஸ் வீட்டிற்கு அனுப்பும்படி முற்பட்டனர். அது நடக்கவில்லை, அதிகமாக இருந்த காரணத்தால் நாங்கள் ஸ்ட்ரைக் என்று கூறினார்கள்.
இறுதியாக கேப்டன் விக்ரம் நானே வந்து உங்க வேலையை செய்கிறேன் என கூறிய நிலையில் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. இந்த ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடும் வாக்குவாதம் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் நடைபெற்ற போது கேப்டன் விக்ரக்கும், பிரதீப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் விக்ரமை பார்த்து வாயை உடைத்து விடுவேன் என கூறினார். இது வன்முறை பேச்சு எனக்கூறி பிக் பாஸ் வீட்டினர் கண்டித்தனர். இதை கவனித்த ரசிகர்கள் இந்த வாரம் Yellow கார்டு பிரதீப் வாங்கப் போகிறார் எனக் கூறி வருகிறார்கள். கமலஹாசன் இது குறித்து எந்த முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.