ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.
பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே, 90 கிட்ஸ் இன் கனவு கன்னியாக ஜொலித்த சிம்ரன் மூன்று முறை காதல் தோல்வி அடைந்த சம்பவம் குறித்து தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் நடிகர் அப்பாஸுடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது.
அதனை அடுத்து ட்ரான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரிடம் சிம்ரன் நெருக்கமானதாகவும், இதற்கு அவர்களின் குடும்பம் சம்மதம் தெரிவிக்காத காரணத்தால், இருவரும் பிரிந்து விட்டதாக அப்போதைய செய்தித்தாள்களில் வெளியானது.
அதன் பின்னர் கமலஹாசன் உடன் பஞ்சதந்திரம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த போது இருவரும் காதலித்ததாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் பரவியது. சிம்ரன் மூன்று காதல் தோல்விக்கு பிறகு 2002 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளி காலத்து தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டதும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சந்திரமுகி படத்தில் முதன் முதலில் சிம்ரன் தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று சிம்ரன் அடம் பிடித்த காரணத்தாலும், பிரபுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று விலகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அவர் அப்போது கர்ப்பமாக இருந்ததால் தான் விலகியதாகவும் செய்திகள் வெளியானது. அதன் பின் பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.