அந்த குதிரைக்கு ஒன்னும் ஆகாது இல்ல.. பிரபல நடிகரை கலாய்த்து தள்ளிய சிவாஜி கணேசன்..!

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.

பராசக்தியில் அறிமுகமான சிவாஜி சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன் பிரபு தமிழில் முன்னணி நடிகராக வளம் வந்ததோடு இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபு முதன்முதலாக நடிக்க தொடங்கிய சமயத்தில் பல படங்களில் அவரது நடிப்பை சிவாஜி ஜாலியாக கலாய்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். சொந்த மகனாக இருந்தாலும் பிரபுவை கலாய்ப்பதில் சிவாஜிக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளதாம்.

மணிரத்தினம் இயக்கிய ஒரு படத்தில் போலீஸ் கேரக்டரில் பிரபு நடித்துள்ளார். பிரபுவின் கேரியரில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது. கார்த்தியுடன் அடிக்கடி மோதிக் கொள்ளும் செம மாசான கேரக்டர் அது. இந்த போலீஸ் கெட்டப்காக உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என மணிரத்தினம் கூறியதால் தினமும் குதிரை ஏறும் பயிற்சியை எடுத்துள்ளார் பிரபு.

தினமும் அதிகாலை பிரபு வீட்டில் இருந்து வெளியே செல்வதை பார்த்த சிவாஜி “என்னப்பா துரை தினமும் காலங்காத்தால அப்படி எங்க தான் போயிட்டு வரீக…” என கேட்டுள்ளார். அதற்கு பிரபு குதிரை பயிற்சி எடுக்க என சொன்னதும் “க்ளூக்” என சிரித்து விட்டாராம் சிவாஜி.

அதோடு இல்லாமல் அது சரி அந்த குதிரைக்கு ஏதும் ஆகிறது இல்லப்பா.. என பிரபுவின் எடையை குறிப்பிட்டு கிண்டலும் செய்துள்ளாராம். இதனை டூயட் படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்புக்கு சென்ற வைரமுத்துவிடம் பிரபு கூறியுள்ளார்.

அதே நேரம் டூயட் படத்திற்காக பிரபுவின் உடல் எடையை வைத்து ஒரு பாடல் எழுத வேண்டும் என ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். விடுவாரா வைரமுத்து, பிரபு சொன்னதை வைத்து அவர் எழுதிய “கத்தரிக்காய் கத்தரிக்காய்” என்ற பாடலில் சிவாஜி கிண்டல் செய்ததை கவித்துவமாக மாற்றிவிட்டாராம் வைரமுத்து.

கத்திரிக்காய் என்ற பாடலில் “குண்டான உடம்பு இழைக்க குதிரை சவாரி செஞ்சா குதிரை தான் இழைச்சு போகுமாம் சொன்னாங்க வீட்டில்”… என்ற வரியை சேர்த்து பிரபுவுக்கே சப்ரைஸ் கொடுத்துள்ளார் வைரமுத்து. இப்படி பலமுறை பிரபுவை சிவாஜி கலாய்த்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.