சினிமா / TV

தள்ளிப்போனது தக் லைஃப் வெளியீடு; ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த கமல்!

கமல்ஹாசன் எழுதிய கடிதம்

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது” என கூறியது கர்நாடகாவில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கன்னட அமைப்புகளும், “தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லை என்றால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது” என கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் கூறவே “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கர்நாடகா ஃபிலிம் சேம்பர் அத்திரைப்படத்தை தடை செய்துள்ளது.

இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் வெளியிட வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கமல்ஹாசன். இவ்வழக்கை இன்று காலை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசன் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து கமல்ஹாசன் கர்நாடக பிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைத்தான் தான் அவ்வாறு கூறியதாகவும் கன்னட மொழியை எந்த விதத்திலும் குறைத்து பேசவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அதில் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

“கன்னடர்களையும் அவர்களது மொழி பற்றையும் நான் மதிக்கிறேன். தமிழைப் போலவே கன்னட மொழியும் பெருமைக்குரிய கலாச்சார பண்பாடு கொண்டவை” எனவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார். 

தக் லைஃப் ஒத்தி வைப்பு

கமல்ஹாசன் இவ்வாறு கடிதம் எழுதியதை தொடர்ந்து, கர்நாடக நீதிமன்றம் “மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள். கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே” என்று கருத்து தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் எனவும் ராஜ்கமல் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.