சினிமா / TV

கர்நாடகாவில் மட்டும் ஓடிடியில் வெளியாகும் தக் லைஃப்? கமல்ஹாசன் காட்டிய அதிரடி?

மன்னிப்பு கேட்க மாட்டேன்

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னட மொழி தோன்றியது” என கூறியது கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பெங்களூரில் “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. 

அது மட்டுமல்லாது பல கன்னட அமைப்புகளும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் கமல்ஹாசனோ மன்னிப்பு கேட்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய வலைப்பேச்சு அந்தணன், கமல்ஹாசன் விவகாரம் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

ஓடிடியில் வெளியீடு?

கர்நாடகாவில்  கமல்ஹாசனுக்கு பல ரசிகர்கள் இருக்கும் நிலையில் நண்பர்கள் பலரும் கமல்ஹாசனிடம், “தக் லைஃப் திரைப்படத்தை ஒரே ஒரு நாள் மட்டும் கர்நாடக பகுதியில் மட்டுமே ஒளிபரப்பாகும் வகையில் ஓடிடியில் வெளியிடலாமே?” என யோசனை கூறினார்களாம். 

ஆனால் அதற்கு கமல்ஹாசன், “அப்படி செய்தால் அது பிரிவினையைத்தான் உண்டாக்கும். அங்கிருக்கும் கன்னட அமைப்புகளுக்கு பெரிய கோபம் வரும். அது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கக்கூடும்” என கூறிவிட்டாராம். இவ்வாறு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

“தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்கவில்லை என்றால் அத்திரைப்படம் வெளியாகாத பட்சத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

யாருக்குமே கை கொடுக்க மாட்டேன்- சர்ச்சை வீடியோவுக்கு கறாராக பதில் சொல்லும் நித்யா மேனன்!

சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின்…

2 minutes ago

இபிஎஸ், அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா… அதிர்ச்சி வீடியோவால் அரசியலில் பரபரப்பு!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…

2 hours ago

என் படத்தை பார்த்துட்டு அந்த இயக்குனர் ஓங்கி அடிச்சாரு- சேரன் சொன்ன தரமான சம்பவம்!

தவமாய் தவமிருந்து  சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…

2 hours ago

திருச்செந்தூர் கடலில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? பக்தர்கள் பரபரப்பு புகார்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…

2 hours ago

விஷால் வீட்டுல அனுமதி எதுக்கு கேட்கணும்.. நான் இப்படித்தான் : சாய் தன்ஷிகா ஓபன் டாக்!

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…

3 hours ago

பாமகவில் நடப்பது தந்தை மகன் பிரச்சனை.. கூட்டணி கட்சி என்பதால்.. வானதி சீனிவாசன் நெத்தியடி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…

4 hours ago

This website uses cookies.