மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோருடன் திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், சான்யா மல்ஹோத்ரா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் நேற்று முன் தினம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலரை பார்க்கையில், கேங்கஸ்டராக இருக்கும் கமல்ஹாசன் சிம்புவை சிறு வயதில் இருந்தே எடுத்து வளர்க்கிறார், சிம்பு வளர்ந்தபின் கேங்க்ஸ்டராக இருக்கும் கமல்ஹாசன் தன்னுடைய பல பொறுப்புகளை சிம்புவிடம் அளிக்கிறார்,
ஆனால் சிம்புவோ கமல்ஹாசனின் இடத்திற்கு வர பல முயற்சிகளை செய்கிறார், இது இருவருக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையாக இருக்கும் என வியூகிக்கப்படுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் விஜய்யின் மிக பிரபலமான ஒரு திரைப்படத்தின் காப்பி என இணையத்தில் பேசத் துவங்கிவிட்டனர்.
விஜய்யும் மோகன்லாலும் இணைந்து நடித்த “ஜில்லா” திரைப்படத்தை போன்ற ஒரு கதைதான் “தக் லைஃப்” திரைப்படத்தின் கதையும் என பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. “ஜில்லா” திரைப்படத்தில் மதுரையில் கேங்கஸ்டராக இருக்கும் மோகன்லால் விஜய்யை தத்தெடுத்து வளர்ப்பார். இருவரும் உண்மையான தந்தை-மகன் போலவே பழகி வருவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் மோகன்லாலுக்கு எதிராகவே திரும்புவார். அதே போல்தான் “தக் லைஃப்” திரைப்படத்தின் கதையும் என்று கூறுகிறார்கள். எனினும் “தக் லைஃப்” திரைப்படம் வெளிவந்த பிறகே அத்திரைப்படத்தின் கதை எப்படி அமைந்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க முடியும்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.