பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், அதில் அதிக வசூலை வாரிக்குவித்தது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்ஷனை அள்ளியது யார் என்பதை பார்க்கலாம்.
துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்து நூலிழையில் முதல் இடத்தை நழுவவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையைப் பொறுத்தவரை துணிவு படம் முதல் நாளில் ரூ.3.75 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ.3.95 கோடியும் வசூலித்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டை பொருத்த வரை துணிவு படம் தான் அதிகளவு வசூல் ஈட்டி உள்ளது. அப்படம் முதல் நாளில் ரூ.19 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது. ஆனால் வாரிசு படத்துக்கு தமிழ்நாட்டில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
தமிழ்நாட்டில் துணிவு படத்தின் வசூல் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டது தான். ஆனால் வாரிசு படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு தான் திரையிடப்பட்டது. இதனால் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு ஒரு ஷோ அதிகமாக கிடைத்தது. இதன்காரணமாகவே துணிவு படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், துணிவு படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் வாரிசு படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் ஆகவில்லை. வருகிற ஜனவரி 14-ந் தேதி அப்படத்தின் தெலுங்கு வெஷன் ஆன வாரசுடு திரைப்படம் தான் அங்கு ரிலீசாக உள்ளது. அப்படி இருந்தும் வாரிசு திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் துணிவை விட அதிக கலெக்ஷனை அள்ளி உள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.