சினிமா / TV

சூர்யாவோட ஒரு படம் கூட ஹிட் அடிக்கல- ரசிகர்களை வாண்டடாக வம்பிழுத்த பிரபலம்!

சூர்யா படத்திற்கு வந்த எதிர்ப்பு

சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “சூரரை போற்று”, 2021 ஆம் ஆண்டு வெளிவந்த “ஜெய் பீம்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பதால் இத்திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தார் சூர்யா.

அந்த சமயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் “சூர்யாவின் திரைப்படங்களை இனி திரையரங்குகளில் வெளியிட மாட்டோம்” என்று மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் திருப்பூர் சுப்ரமணியத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். 

ஓடிடியில் வெளியான “சூரரை போற்று”, “ஜெய் பீம்” ஆகிய திரைப்படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதன் பின் சூர்யா நடித்து திரையரங்குகளில் வெளியான, “எதற்கும் துணிந்தவன்”, “கங்குவா” போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவின. சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. 

ஒரு படம் கூட ஹிட் இல்லை..

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட திருப்பூர் சுப்ரமணியம் “சூர்யா இரண்டு திரைப்படங்கள் ஓடிடிக்கு கொடுத்தார். இரண்டு திரைப்படங்களுமே ஹிட். ஆனால் அதன் பிறகு அவர் நடித்து திரையரங்கில் வெளியான எதாவது ஒரு படம் ஹிட் ஆனதா என்று சொல்லுங்கள். சூர்யா ரசிகர்களுக்கு நான் சவால் விடுகிறேன். அப்படி ஒரு படம் ஹிட் ஆனது என்று நீங்கள் சொன்னால் நான் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்று ஆவேசமாக கூறினார். இவரது பேட்டி சூர்யா ரசிகர்களை மேலும் கோபமாக்கிவுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.