கோலிவுட்டில் பல கிளாசிக் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் “சூப்பர் குட் பிலிம்ஸ்”. இதன் உரிமையாளரான ஆர்.பி.சௌத்ரிக்கு ஒரு ஆசை இருந்தது. அதாவது தனது நிறுவனத்தின் 100 ஆவது திரைப்படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் எந்த ஆசை.
இதற்காக விஜய்யுடன் பேச்சுவார்த்தைகளும் பல நடந்தன. ஆனால் அது கைக்கூடவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க திட்டமிட்ட விஜய் திரைப்படம் குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ஆர்.பி.சௌத்ரி தனது 100 ஆவது திரைப்படத்தின் திட்டத்தை குறித்து திருப்பூர் சுப்ரமணியமிடம் கலந்தாலோசித்தாராம். அப்போது திருப்பூர் சுப்ரமணியம், “எனக்கு 73 வயதாகிவிட்டது. உங்களுக்கு 78 வயதாகிவிட்டது. நீங்கள் எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் ஒரு பெரிய நடிகருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இயக்குனருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து, ஒரு 300 அல்லது 350 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும். இந்த ரிஸ்க் நமக்கு வேண்டாம் சார்” என ஆலோசனை கூறினாராம். இதன் பிறகு ஆர்.பி.சௌத்ரி தனது முடிவை கைவிட்டுவிட்டதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறுகிறார்.
திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்…
மாற்றி மாற்றி அறிக்கை ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினரின் பிரிவிற்கு பின் ஆர்த்தியின் தாயார் பணத்திற்காக ரவி மோகனை பயன்படுத்திக்கொண்டார் என…
வெளியானது டிரைலர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.…
கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை, அப்பா என்று தமிழக முதல்வரை அழைப்பது குறித்து காட்டமாக பேசினார்…
கலவையான விமர்சனம் “டிடி ரிட்டன்ஸ்” என்ற அட்டகாசமான காமெடி ஹாரர் திரைப்படத்தை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக நேற்று வெளிவந்துள்ள திரைப்படம்தான்…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பக்கத்தில், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர்…
This website uses cookies.