ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாத்துறையில் எக்கச்சக்கமான தயாரிப்பாளர்கள் வலம் வந்தார்கள். ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தயாரிப்பாளர்கள் உள்ளனர். அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் வெளிவருகிறது. அதுமட்டுமல்லாது முன்பை விட தற்போது வெளிவரும் இவர்களின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்வது போல் இல்லை எனவும் விமர்சனங்கள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் பேசிய கருத்து ஒன்று ரசிகர்கள் பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
“1970களில் இருந்து 2000 வரை பல தயாரிப்பாளர்கள் படமெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்களே இல்லை. 2000 ஆண்டிற்குப் பின் சரியத் தொடங்கியது” என கூறிய அவர், “நிறைய ஹீரோக்களை பார்த்தீர்கள் என்றால் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். ஷூட்டிங் எல்லாம் நடப்பதில்லை. உண்மையான நிலவரம் இதுதான்” எனவும் கூறினார். இவர் பேசிய வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
பணத்தாசை பிடித்த இளையராஜா! தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது…
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் விளாங்குடி பகுதிசெயலாளர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்-மோர் பந்தல்…
This website uses cookies.