சினிமா / TV

2024-ல் மிரட்டிய TOP 5 வில்லன்கள்…கோடிகளை அள்ளிய பிரபல நடிகர்கள்..!

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாவிலேயே வில்லன் கதாபாத்திரங்களுக்கு தனி இடம் இருந்து வருகிறது.ஹீரோக்களுக்கு இணையாகவே வில்லன்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இதனால் வில்லன் நடிகர்களின் சம்பளம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு வில்லனாக நடித்த 5 முக்கிய நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவல்கள் இதோ..!

கல்கி 2898 AD – கமல்ஹாசன்

இந்திய சினிமாவின் உலக நாயகனாக மிளிரும் கமல்ஹாசன், கல்கி 2898 AD படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் 10 நிமிடக் காட்சிக்காக கமல்ஹாசன் ரூ.20 கோடி சம்பளமாக பெற்றார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: “குட் பேட் அக்லி”….ரசிகர் கேட்ட கேள்வி…ஜி.வி.பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்…இணையத்தில் கலக்கல்..!

தேவாரா – சைப் அலிகான்

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கொரட்டல சிவா இயக்கிய தேவாரா திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடித்தார். அவருக்கு இக்கதாபாத்திரத்திற்காக ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் பான் இந்தியாஅளவில் சைப் அலிகான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


சைத்தான் – மாதவன்

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட மாதவன், வித்தியாசமான கதைகளில் நடிக்க விரும்புகிறார். அதற்கு சிறந்த உதாரணம் சைத்தான் திரைப்படம். வில்லனாக நடித்த இப்படத்தில் மாதவனுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புஷ்பா 2 – பகத் பாசில்

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படம் ரூ.1000 கோடி வசூலை அடைந்துள்ளது. இதில் பகத் பாசில் வில்லனாக நடிக்க ரூ.8 கோடி சம்பளமாக பெற்றார். இவர் முதல் பாகத்தில் 3 கோடி சம்பளமாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


கங்குவா – பாபி தியோல்

சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல், தனது கதாபாத்திரத்திற்காக ரூ.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் . ரசிகர்கள் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாபி தியோலின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.


வில்லன்களின் அசுர சம்பள உயர்வால்,தற்போது இந்திய சினிமாவில் பல ஹீரோக்கள் வில்லன் கதாபாத்திரத்திற்கு இறங்கியுள்ளனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.