பணக்கார வீட்டுப் பெண்ணை வளைத்து போட்ட 6 ஹீரோக்கள்.. அதுலயும் அவரோட மனைவி வேற லெவல்..!

பல சினிமா நட்சத்திரங்கள் உச்சம் தொட்டு மிகப்பெரிய உயரத்தை அடைந்திருந்தாலும், அவர்களுடைய திருமண வாழ்க்கை என்று வரும் பொழுது அதை பெற்றோர்களின் கையிலே விட்டிருக்கிறார்கள். பெரும்பாலும், இவர்கள் பொருளாதார அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்களை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் காதல் திருமணமாக இருந்தாலும், பணக்கார பெண்களை தான் வளைத்து போட்டு இருக்கிறார்கள். அப்படி கோடீஸ்வர பெண்களை வளைத்து போட்ட ஆறு நடிகர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆர்யா -சாயிஷா

தமிழ் சினிமாவில் பிளே பாய்யாக ஆட்டம் போட்டு வந்த ஆர்யா, திருமணம் என்று வந்தவுடன் அதற்கு ஏற்றார் போல் பெண்ணை பார்த்து காதல் வலையில் வீழ்த்தி கல்யாணம் செய்து கொண்டார். இவருடைய கல்யாணம் நடிகையான சாயிஷா உடன் நடைபெற்றது. இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பவர் சாயிஷா. இவருடைய அப்பா அம்மா இருவருமே பாலிவுட்டில் மிகப்பெரிய புள்ளிகள் என்று சொல்லலாம். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த திலீப் குமார் தான் சாய்ஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு -லட்சுமி

நடிகர் விக்ரம் பிரபு 20 வயதிலேயே லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது மாமனார் நடிகர் பிரபுவுக்கு நெருங்கிய நண்பர். சேலத்தில் உள்ள எஸ் எஸ் எம் என்ற மிகப்பெரிய கல்லூரியின் நிறுவனர் விக்ரம் பிரபுவின் மாமனார். இவர் காதலில் விழுந்தாலும், பெரிய இடத்து பெண்ணாகத்தான் வளைத்து போட்டு உள்ளார் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

அருண் விஜய் ஆர்த்தி மோகன்

பல வருடங்களாக சினிமாவில் ஜெயிக்க போராடி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய். இவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தான் செய்து கொண்டார். ஆனால், இவர் திருமணம் செய்துள்ள இவரது மனைவி மிகப் பெரிய தயாரிப்பாளரின் மகள். ஒரு கட்டத்தில் அருண் விஜயை தூக்கி விட அவருடைய மாமனார் தொடர்ந்து மாஞ்சா வேலு, மலை மலை போன்ற படங்களை தயாரித்திருந்தார்.

ஜெயம் ரவி -ஆர்த்தி

ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, சினிமா நடிகர் நடிகைகளை காட்டிலும், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு ரசிகர்கள் அதிகம் என்று சொல்லலாம். இவர்கள் என்னதான் காதல் திருமணம் செய்து கொண்டாலும், ஜெயம் ரவி திருமணம் செய்துள்ள ஆர்த்தியின் தந்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் ஆவார். இவர் பெரிய புளியங்கொம்பை தான் பிடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது. மேலும், ஆர்த்தியின் தாய் சின்னத்திரை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் -சங்கீதா

தற்போது மாஸ் ஹீரோவாக இருந்து வரும் விஜய் ஒருகால கட்டத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பொழுதே சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில், இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இவருடைய அப்பா லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். மேலும், இலங்கையிலும் இவர்களுக்கு பல கோடி கணக்கில் சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி- ரஞ்சனி

நடிகர் கார்த்தி தன் அண்ணன் சூர்யாவை போன்று இல்லாமல் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டார். சூர்யாவின் திருமணம் காதல் திருமணம் என்பதால் கார்த்தியின் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது சிவகுமாரின் மிகப்பெரிய ஆசையாக இருந்ததை பல மேடைகளில் பேசி இருப்பார். அதேபோல், மகன் கார்த்தியும் அதை நிறைவேற்றும் காட்டி இருந்தார். இருந்தாலும், இவர் திருமணம் செய்திருக்கும் ரஞ்சனியின் அப்பா ஈரோட்டில் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறதாம்.

Poorni

Recent Posts

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

33 minutes ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

1 hour ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

2 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

3 hours ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

4 hours ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

19 hours ago

This website uses cookies.