சினிமா / TV

டூரிஸ்ட் ஃபேமிலி பார்க்க ஆசைப்பட்டு ஏமாந்துபோய் திரும்பும் ரசிகர்கள்! ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை?

கம்மி பட்ஜெட், மிகப்பெரிய வெற்றி

கடந்த மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படத்துடன் இத்திரைப்படமும் வெளியானது. 

ரூ.14 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் “ரெட்ரோ” என்னும் பெரும் பூதத்திற்கு இணையாக களம் இறங்கியது. ஆனால் நடந்தது என்னமோ வேறு? அதாவது “ரெட்ரோ” திரைப்படத்தை ஓவர் டேக் செய்து டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது “டூரிஸ்ட் ஃபேமிலி”. 

தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் இத்திரைப்படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளோடு திரையரங்கும் நிரம்பி வழிகிறது. ஆதலால் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக திரையரங்கங்களுக்குச் செல்லும் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காததால் விரக்தியோடு வீடு திரும்புகின்றனர். 

மாபெறும் கலெக்சன்!

“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகின்றன. இந்த 7 நாட்களில் இத்திரைப்படம் உலகளவில் ரூ.25 கோடிகளை அள்ளியுள்ளதாம். தமிழகத்தில் மட்டுமே ரூ.18.28 கோடிகள் அள்ளியுள்ளது. இவ்வாறு இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சின்ன பட்ஜெட் திரைப்படமாக ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது “டூரிஸ்ட் ஃபேமிலி”. இத்திரைப்படத்திற்கு திரைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.