கடந்த மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சூர்யாவின் “ரெட்ரோ” திரைப்படத்துடன் இத்திரைப்படமும் வெளியானது.
ரூ.14 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் “ரெட்ரோ” என்னும் பெரும் பூதத்திற்கு இணையாக களம் இறங்கியது. ஆனால் நடந்தது என்னமோ வேறு? அதாவது “ரெட்ரோ” திரைப்படத்தை ஓவர் டேக் செய்து டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது “டூரிஸ்ட் ஃபேமிலி”.
தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் இத்திரைப்படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளோடு திரையரங்கும் நிரம்பி வழிகிறது. ஆதலால் இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக திரையரங்கங்களுக்குச் செல்லும் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காததால் விரக்தியோடு வீடு திரும்புகின்றனர்.
“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகின்றன. இந்த 7 நாட்களில் இத்திரைப்படம் உலகளவில் ரூ.25 கோடிகளை அள்ளியுள்ளதாம். தமிழகத்தில் மட்டுமே ரூ.18.28 கோடிகள் அள்ளியுள்ளது. இவ்வாறு இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சின்ன பட்ஜெட் திரைப்படமாக ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது “டூரிஸ்ட் ஃபேமிலி”. இத்திரைப்படத்திற்கு திரைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த செஞ்சி மோட்டூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…
This website uses cookies.