உருகி உருகி காதலித்த 5 டாப் ஹீரோக்கள்… அஜால் குஜால் பண்ணிட்டு அல்வா கொடுத்த திரிஷா!

Author: Shree
20 May 2023, 5:56 pm
trisha
Quick Share

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்து வந்த ரகசியம் சமூகவலைத்தளங்களில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அது யார் யார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

விக்ரம்:

விக்ரம் மற்றும் த்ரிஷா நடித்து கடந்த 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் சாமி. இப்படத்தில் இவர்கள் இருவரும் காதலித்து நடிப்பில் நிஜ காதலை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியானது. சாமி படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடியிருப்பார்கள். அதன் பின்னர் சில வருடங்கள் காதலித்து கேப் விட்டிருந்த இந்த ஜோடி மீண்டும் இணைந்து பீமா படத்தில் நடித்தது கோலிவுட்டில் கிசுகிசுக்கபட்டது.

விஜய்:

விஜய் த்ரிஷா இருவரும் கில்லி படத்தில் நடித்தபோது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது.அதன் பின்னர் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து கொண்டு நெருக்கமாக பழகி வந்ததாகவும் இதனால் நடிகர் விஜய் மற்றும் மனைவிக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் குடும்பத்தாரின் கட்டளைப்படி திரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கமாட்டேன் என கூறினாராம்.

சிம்பு:

நடிகர் சிம்பு திரிஷாவுடன் விண்ணைத்தாண்டி வருவாரா படத்தில் நடித்தபோது காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், அவர்கள் உண்மையில் நல்ல நண்பர்கள். இன்று வரை நட்பாகவே பழகி வருவதாக திரிஷா கூட பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

ராணா:

பிரபல தெலுங்கு நடிகரான ராணா நடிகை திரிஷாவை வெளிப்படையவே காதலித்து வந்தார். அவர்கள் இருவருமே பல நிகழ்ச்சிகளில் தங்களது காதலை வெளிப்படுத்தினார்கள். ஆனால், அந்த காதல் கடைசி வர செல்லவில்லை. ராணா சமயம் பார்த்து திரிஷாவை கழட்டிவிட்டு வேறு ஒரு தொழிலதிபர் மகளை திருமணம் செய்துக்கொண்டு திரிஷாவுக்கு டாட்டா கட்டிவிட்டார்.

தொழிலதிபர் வருண்:

இதனிடையே திரிஷா சினிமா அல்லாத ஒருவரை காதலித்து டேட்டிங் செய்துவந்தார். அவர் மிகப்பெரிய தொழிலதிபர். பெரிய பணக்காரர் என்பதால் நடிப்பை எலாம் விட்டுவிட்டு இத்தோடு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிடலாம் என் நினைத்தார். அந்த சமயம் திருமணத்திற்காக திரிஷாவின் வீட்டார் ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது திரிஷா திருமணம் செய்துள்ளவது இது சரியான நேரமில்லை. அவருக்கு இனிமே தான் சினிமாவில் மிகப்பெரிய இடம் கிடைக்கப்போகிறது என ஜோஷியர் கூற உடனே திருமணத்தையெல்லாம் நிறுத்திவிட்டாராம்.

Views: - 6963

8

4