நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் பகுதி 1 படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.
இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள்.
மேலும் இந்த படத்தின் பிரமோஷனுக்காக இவர் சென்ற பகுதிகளில் எல்லாம் புடவையைக் கட்டி பளிச்சென்று அசத்தி வந்த இவருக்கு பல படங்கள் தொடர்ந்து வந்து குவிந்தது.
இதனை அடுத்து தமிழில் திரிஷா தி ரோடு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ராம் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வந்து விட்டது.
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட இவர் டான்ஸ் ஏதும் ஆடாமல் இருந்து விட்டார். இதற்கு காரணம் இவரது காலில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் தான்.
இதனைத் தொடர்ந்து இவர் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீங்கிய காலை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த வீக்கம் சரியாகி பழைய நிலையில் டான்ஸ் ஆட வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்கள்.
மிக விரைவில் திரிஷாவின் கால் குணமாகி பழைய நிலைக்கு அவர் திரும்புவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதற்கு மிகச் சிறப்பான நடனத்தையும் ஆடுவார் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.
சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…
90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…
ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…
This website uses cookies.