தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார்,
அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்த பின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள். மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க இருவரும் போராடி வருகிறார்கள். நயன்தாரா கல்யாண பிசியில் இருந்த கேப்பில் உள்ளே நுழைந்த திரிஷா கோலிவுட்டில் மீண்டும் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்து நயன்தாராவையே ஒதுக்கி வைத்துவிட்டார்.
தற்போது திரிஷா தான் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். நயன்தாராவுக்கு இடம் கொடுக்காத அளவுக்கு தொடர் ஹிட் படங்களில் நடித்துவிட்டு தான் திருமணம் செய்துக்கொள்வேன் என முடிவோடு இறங்கிவிட்டாராம் திரிஷா. திரிஷா தன் சாம்ராஜ்யத்தையே அழிக்கப்போகிறார் என்ற பயம் நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைத்து வருகிறது.
இதனைக் கொஞ்சம் அமைதியாக உஷாராக காயை நகர்த்தி ஒரு மாபெரும் ஹிட் கொடுக்க நயன்தாரா திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ளாராம். ஆனால், அதற்கு விஜய் தான் தடையாக இருக்கிறார். ஆம், திரிஷா லியோ படத்தில் நடித்து விஜய் உடன் நெருக்கமாக பழகி வருவதால் அவர் தான் அடுத்தடுத்த நல்ல படவாய்ப்புகளை தேடி கொடுக்கிறாராம். பாவம் நயன்தாரா நிமிர முடியாத அளவுக்கு சறுக்கலை சந்தித்துவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.