தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார்,
அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்த பின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள். மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க இருவரும் போராடி வருகிறார்கள். நயன்தாரா கல்யாண பிசியில் இருந்த கேப்பில் உள்ளே நுழைந்த திரிஷா கோலிவுட்டில் மீண்டும் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்து நயன்தாராவையே ஒதுக்கி வைத்துவிட்டார்.
தற்போது திரிஷா தான் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார். நயன்தாராவுக்கு இடம் கொடுக்காத அளவுக்கு தொடர் ஹிட் படங்களில் நடித்துவிட்டு தான் திருமணம் செய்துக்கொள்வேன் என முடிவோடு இறங்கிவிட்டாராம் திரிஷா. திரிஷா தன் சாம்ராஜ்யத்தையே அழிக்கப்போகிறார் என்ற பயம் நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைத்து வருகிறது.
இதனைக் கொஞ்சம் அமைதியாக உஷாராக காயை நகர்த்தி ஒரு மாபெரும் ஹிட் கொடுக்க நயன்தாரா திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ளாராம். ஆனால், அதற்கு விஜய் தான் தடையாக இருக்கிறார். ஆம், திரிஷா லியோ படத்தில் நடித்து விஜய் உடன் நெருக்கமாக பழகி வருவதால் அவர் தான் அடுத்தடுத்த நல்ல படவாய்ப்புகளை தேடி கொடுக்கிறாராம். பாவம் நயன்தாரா நிமிர முடியாத அளவுக்கு சறுக்கலை சந்தித்துவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.